Categories
தேசிய செய்திகள்

மேல்முறையீடு தள்ளுபடி: விரைவில் இந்தியா வருகிறார் நீரவ் மோடி?…. நீதிமன்றம் தீர்ப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய்.13,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு பிரிட்டனுக்கு தப்பியோடி, இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதை காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பணமோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது எனவும் பிரிட்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதுமட்டுமின்றி சென்ற பிப்ரவரி மாதம் லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என தீா்ப்பளித்திருந்தது சரியே எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |