தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாக பொன்னி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்பியாக கிங்க்ஸ்லி, சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாக சண்முகப்பிரியா, மாநில மனித உரிமைகள் ஆணையம் எஸ்பியாக சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.