Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்….!!!!!

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் போன்ற 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்தது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. இத்தொகுதியை பாஜகவிடமிருந்து திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. இதுபோன்றே பீகாரில் ஆர்ஜேடி வெற்றி அடைந்துள்ளது.
சத்தீஸ்கரின் கைராகர், மராட்டியத்தின் கோலாப்பூர் போன்ற தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருகிறது. அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த பாபுல் சுப்ரியோ பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திரிணமூல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில் காங்கிரசிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சி சார்பாக அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார்.

Categories

Tech |