Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் விவசாயியான பிரபாகரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |