Categories
மாநில செய்திகள்

மேயர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…. இதோ முழு விபரம்……!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது.

# சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா தேர்வாகியுள்ளார்

# கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா தேர்வானார்

# திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி தேர்வு

# திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் தேர்வானார்

# அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

# சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டி இன்றி தேர்வானார்

# திசையன்விளை பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சிராணி தேர்வு

# நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் ஜெயந்தி

# ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் ஆக தேர்வானார் உதயகுமார்

# கடலூர் மாநகராட்சி மேயராக திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி

# தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதாவது மறைமுக தேர்தலில் காங்கிரசின் சற்குணத்தை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி

# மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவியேற்பு

# காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுக அதிகாரபூர்வ வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி

#ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி

# தாம்பரம் மாநகராட்சி மேயராக திமுகவின் வசந்தகுமாரி பதவியேற்பு

Categories

Tech |