தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரி நாதன் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.