Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெதுவாக பந்து வீசிய மும்பை அணி….. ரோகித் சர்மாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்…!!!!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அணியில் உள்ள 10 வீரர்களுக்கும் 6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் எதுவும் நடந்தால் ரோகித் சர்மா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |