Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணித்த 30 பயணிகளுக்கு…. பரிசு மழை… மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!!!!!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பயணிகளுக்கான குலுக்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 40 நாள்களுக்கான  விருப்பம் போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை வழங்கப்பட உள்ளது.

இது போல மாதம் ஒரு பரிவர்த்தனை ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருள்கள் வழங்கப்படும். மெட்ரோ பயண அட்டை வாங்கிய அதில் குறைந்த பட்ச தொகையான ரூபாய் 500க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் 2000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இவ்வாறு 30 பேர்களுக்கு மார்க் மெட்ரோ சார்பாக அரசு அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும். அடுத்த மாதத்திற்கான குழுக்கள் மே 21-ஆம் தேதி நடைபெறும் பரிசு விவரங்கள் தெரிந்து கொள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Categories

Tech |