மெட்ரோ ரயில்கள் இன்று (மார்ச்.17) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் திங்கள்கிழமை-சனிக்கிழமை காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணிமுதல் 11 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன்பின் பிற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதாவது இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.