Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து…. மர்மநபர் செய்த செயல்…. போலீசார் வலைவீச்சு….!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தனலட்சுமி ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |