Categories
அரசியல் மாநில செய்திகள்

மூடுமந்திரம் எதற்கு….? அப்பல்லோவில் ஜெயலலிதா…. அப்போதே எச்சரித்த கலைஞர்…. சிக்கலில் சசிகலா….!!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை அருகில் யாரையும் விடாமல் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா என்பதனால் அவர் மீது பல தரப்பிலும் சந்தேகம் இருந்து வந்தது. இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் சசிகலா மீது சந்தேகத்தை ஏற்படுத்த விதமாக அமைந்திருந்ததால் சசிகலாவிற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 2016 செப்டம்பர் 30-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி வெளியிடப்பட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் மூடு மந்திரம் எதற்கு? என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக ஆளுநர் இதுவரை சென்று பார்க்கவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறித்த செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மூடு மந்திரமாக வைத்திருப்பதால் ஒரு சிலர் விரும்பத்தகாத செயல்களை பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசின் சார்பாக முதல்வரின் உடல்நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த அறிக்கையை இணையதளத்தில் பரப்பி வரும் அவருடைய அபிமானிகள் அப்போதே கருணாநிதியின் பேச்சை கேட்டிருந்தால் சசிகலாவுக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |