ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு பிராஸ்பேர் கேனியல் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. இந்த சுரங்கமானது 155 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மூடப்பட்டதால் தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது கண்கலங்கி சென்றனர். இந்த சுரங்கம் ஆனது பசுமை இல்ல வாயுக்கள் என்று கூறப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பதற்காகவே மூடப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் ஐநா சபை பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்று எச்சரிக்கை விடுத்ததுதான். இதன் காரணமாக ஜெர்மனியைத் தொடர்ந்து நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளும் நிலக்கரி சுரங்கங்களை மூடியது. இந்த ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உல கநாடுகளுக்கு நிலக்கரி சுரங்கத்தை திறப்பது அழிவுப்பாதையை கொண்டு செல்லும் என்று அறிவுரை கூறியது.
ஆனால் இன்று நிலக்கரி சுரங்கத்தை மீண்டும் திறப்பதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் நிலக்கரி சுரங்கத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர்தான். ஏனெனில் போரின் காரணமாக ரஷ்யா மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யும் இயற்கை எரிவாயு குறைந்துள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் மீண்டும் ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் நிலக்கரி சுரங்கத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.