இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் படம் கோப்ரா. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருக்கிறார். அத்துடன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக் குமார், ஆனந்த் ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பாக எஸ் லலித்குமார் தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக விக்ரம் உள்ளிட்ட படக் குழுவினர் திருச்சி, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் இடையே பேசிய விகரம், கோப்ரா வரும் 31 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஆகவே அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எத்துறையில் விருப்பம் இருக்கிறதோ, அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒருநாள் உலகம் திரும்பி பார்க்கும் என அவர் கூறினார்.