Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு…. டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Categories

Tech |