தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்டு 5 வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயிலில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பணியாளர்கள் கொண்டு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.