Categories
தேசிய செய்திகள்

மும்முனை ஆபத்து இந்தியாவிற்கு.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!!

இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை, கலவரம்,கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் இவைகள் இந்தியாவிற்கு மும்முனை ஆபத்தாக வந்திருக்கிறது. இதனை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா தற்போது கடுமையான சீரழிவை சந்திக்கின்றது எனவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு பின்னடைவை சந்திக்கும் பொழுது, மத சம்மந்தமான  மோதல்கள், அதை மேலும் பாதிக்கும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.இக்காரணத்தினால் தொழிலதிபர்கள் அனைவரும் புதிய திட்டங்களை செயல்படுத்த தயங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவின்  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு  மத்திய அரசு உடனடியாக ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தன்னுடைய  செயல்களால் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திருப்பி பெற்று கொள்ள வேண்டும் அல்லது அந்த சட்டத்தை மாற்றி  அமைக்க வேண்டும் எனவும், பொருளாதார நிலையை ஊக்குவிக்க சலுகைகளை  அறிவிக்க வேண்டும் என்றும், மன்மோகன் சிங் கேட்டுள்ளார்.

Categories

Tech |