Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்வர் சிலை திறப்பு…. விழாவில் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்த விழாவை முன்னிட்டு  மின்விளக்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பு மக்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு பலமாக காற்று வீசியது. இதனால் மின் விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்து அருகில் உள்ள ஒரு கோவிலின் மீது விழுந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |