சொத்து பதிவுகளுக்கான முத்திரை வரி குறைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சொத்துக்களுக்கான முத்திரை வரியை குறைக்க உள்ளதா கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 45 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துகளுக்கான முத்திரை வரி குறைப்பதாக கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முத்திரை வரி குறைக்கப்படும் என ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கர்நாடக அரசு உறுதி அளித்திருந்தது.
இதன்படி தற்போது வரியை குறைக்க கர்நாடகா கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக முத்திரை வரி 5 விழுக்காடாக இருந்தது. இந்நிலையில் 45 லட்சம் அல்லது அதற்கு கீழ் மதிப்பு கொண்ட சொத்துகளுக்கு முத்திரை வரி 3 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்து பதிவுகள் அதிகரிக்கும் எனவும், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.