Categories
மாநில செய்திகள்

முதுமலை புலிகள் காப்பக பகுதியில்… 4 பேரை கொன்ற புலி…. எப்படி பிடிபட்டது தெரியுமா?….!!!

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 4 பேரை கொன்ற புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஆட்கொல்லி புலி 14 பேரை கொன்றது. இதனை அடுத்து 24 செப்டம்பர் 2002 முதல் 15 அக்டோபர் 2022 வரையில் கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர். கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் மேலாக நான்கிற்கும்  மேற்பட்ட வன காவல்படை மருத்துவர்கள், 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ,வேட்டை தடுப்பு காவலர்கள், 3 மோப்பநாய் மற்றும் 2 கும்கி யானை உதவியுடன் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கபட்டது.

பின்னர் கர்நாடகாவில் உள்ள மைசூர் உயிரியல் பூங்காவில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புலியை பிடிப்பதற்கு ரூ.11,34,000  செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. புலியை பிடிப்பதற்கு இரும்பு கூண்டு வைத்தல், வாகன வாடகை, மருந்துகள் உபகரணங்கள் வாங்கியது தொடர்பான செலவுகள் அதில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் உதகை ,கூடலூர், மசினகுடி வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர் அவர்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் தேநீர் உள்ளிட்ட செலவுகள் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |