தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பற்காக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு வாரியம் மேற்கொண்டது. இதற்கான கணினி வழி தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெற்றது.
இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தகுதி பெற்ற 217 பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி விவரங்களை பட்டதாரிகள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.மேலும் இந்திய பாடங்களில் தேர்வு பெற்றவர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.