நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தவிர பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருதி பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதாவது வறுமை நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு பல திட்டங்களின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் LIC HFL வித்யாதன் திட்டத்தில் என்ற திட்டத்தில் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு மாணவர்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியை பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இளநிலை படிப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டுமெனவும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் ஆன்லைன் முறையில் என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணபிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.