ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் என 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழக அரசால் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், 7 லட்சத்து 76 ஆயிரத்து, 209 ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதரவற்றவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில் கடந்த ஆட்சியில் பல விதிமுறைகளை பிறப்பிக்கப்பட்ட தனால் சுமார் ஏழரை லட்சம் ஆதரவற்றவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கும் பணி தொடங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.