Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவர்கள் செய்த செயல்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சம்பந்தம் மற்றும் முனியசாமி என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |