சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முழுவதும் 312 சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் 10 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி வெளியே சுற்றியது தொடர்பாக 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது, தொடர்பாக 462 வழக்குகளும், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டது.மேலும், போக்குவரத்து காவலர்கள் மேற்கொண்ட வாகனத் தணிக்கைகள் மற்றும் வெளியே சுற்றியது தொடர்பாக 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.