நெதர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியானது 3 ஒரு நாள் போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோட்டர்டாம் நகரில் நேற்றையதினம் முதல் ஒரு நாள் போட்டியானது நடந்தது. இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் பிடித்த பாகிஸ்தான் அணி நிர்ணம் செய்யப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான பகர்சமான் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் அவர் 109 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 74ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதற்கிடையில் அதிரடியாக ஆடிய ஷதாப்கான் 28 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. எளிதில் வெற்றியடையலாம் என்று எண்ணிய பாகிஸ்தானுக்கு சவாலாக நெதர்லாந்து அணியினர் விளையாடினர். பின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்ரம் ஜித் சிங், டாம் கூப்பர் தலா 65 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். முடிவில் நெதர்லாந்து அணியானது 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் வாயிலாக பாகிஸ்தான் அணியானது 16 ரன் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதன்பின் ஆட்டநாயகன் விருது பகர் சமானுக்கு வழங்கப்பட்டது.