தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய அவர், நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உட்பட என்னுடைய வரலாறு, ஆனால் எடப்பாடி பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது என்று விமர்சனம் செய்துள்ளார்.