Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த உயர் நீதிமன்றம்…. குஷியில் தொண்டர்கள்….!!!

முதல்வர் ஸ்டாலினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புகழ்ந்து பாராட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூட்யூப் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசியதை வைத்து அவரை தரக்குறைவாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நடத்தி வருகிறது.

இனிமேல் இதுபோன்ற அவதூறு பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சாட்டை துரைமுருகன் தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக கூறி தமிழக அரசு சார்பில் அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றிவருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அவதூறாக பேசிய விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விவரங்கள் சிடியதாக தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜாமீன் ரத்து செய்யப்படும் என வழக்கை தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |