Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்கொடை வழங்க கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் உதவ நினைப்பவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தங்களால் இயன்றதை தாராளமாக நிதி வழங்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பொது நிவாரண செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும் என்று கூறியுள்ள அவர், நன்கொடை வழங்குபவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |