தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி, ஓபிஎஸ் போட்டியிடும் போடிநாயக்கனூர், தொண்டாமுத்தூர், குமாரபாளையம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்னும் தொடங்கவில்லை.