முதல்வர் பதவிக்கு பழனிசாமி இனி கனவு காணமுடியாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு கனவு காணமுடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகையை தருகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு வழங்கவில்லை. அரசு பணத்தை தேர்தலுக்காக அதிமுக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.