வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மண்ணடி சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த விவாகரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரமுகி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று நிபந்தனையற்ற மனிப்பு கோரி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்கள். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மூன்று வார காலம் மதுரையில் தங்கியிருந்து தலாக்குளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.