சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மாமண்டூர் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பெருமாள் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.