Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிகளுக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை லாரியில்  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த  பணத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முட்டை வியாபாரிகளான சரவணமூர்த்தி மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கு சொந்தமானது  என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |