புதிய உலக சாதனை படைத்த 4 வயது சிறுமிக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.
விருதுநகரைச் சேர்ந்த பிரபு – ஜெயபாரதி தம்பதியின் 4 வயது மகள் ஹாசினி. யுகேஜி படித்து வரும் இவர் கடந்த ஒரு வருடமாக யோகாசனம் கற்று வருகிறார். யோகாசனத்தில் புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவருக்கு பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருந்து சமகோனசனா என்கின்ற யோகாசனத்தை கற்றுத் தந்தனர்.
அதன்படி, இருபுறமும் முட்டைகள் மீது கால் வைத்தவாறு 31 நிமிடம் .23 நொடிகள் யோகசனம் செய்து அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இதே சாதனையை தஞ்சாவூரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் செய்து உலக சாதனை படைத்திருந்த நிலையில், இந்த சாதனையை முறியடித்த ஹாசினி புதிய சாதனை படைத்துள்ளார்.நோபிள் வேர்ல்டு ரிகார்ட்ஸ் சென்னை நிர்வாக இயக்குநர் அரவிந்த், திருஞானராமன் சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.