கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந். இவர் முடி உதிர்வு காரணமாக கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்து விடும். பிறகு நல்ல முடி வளரும் என்று மருத்துவர் கூறியுள்ளார். மருந்து சாப்பிட ஆரம்பித்த உடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல் கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் அதிர்ச்சடைந்த இளைஞர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
மேலும் அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் இது குறித்து அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே பிரசாந்த் மரணம் தொடர்பாக மருத்துவர் மீது குடும்பத்தினர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் மருத்துவர் தவறு இழைத்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் விரிவான விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.