Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்தது… “நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிந்தனர்”… வெளியான அறிவிப்பு!!

நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்..

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது.

அதே சமயம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே, முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் ரூத் பிரபு என்று பெயர் வைத்திருந்த சமந்தா அதை எடுத்து விட்டு நாகார்ஜுனாவின் குடும்ப பெயரான சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார்..

இந்நிலையில் கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் வைத்திருந்தார். இதனால் நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே பிரச்சினை இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. மேலும் அவரது மாமனார் நாகர்ஜுனா பிறந்த நாளிலும் பங்கேற்கவில்லை.. அமீர்கானுக்கு நாகர்ஜுனா குடும்பத்தினர் வைத்த விருந்திலும் சம்பந்த பங்கேற்காததால் இருவரும் விவாகரத்து செய்யபோகிறார்களா? என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது பற்றி உண்மையான அதிகார்வ பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்தது..

இந்த நிலையில் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. அதேபோல சமந்தாவை பிரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் நாக சைதன்யா..

நாக சைதன்யா – சமந்தா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

 

https://www.instagram.com/p/CUhawZvrPK9/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CUharJFJsoU/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |