ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்விழ்ச்சிக்கு கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக குளித்து சென்றுள்ளனர்.