பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அடுத்த பொன்பரப்பி அருகில் சேடக்குடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருடைய மகன் அஜித்குமார். இவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பலரும் பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த முகநூல் நிறுவனம் சென்னையில் இருந்து அரியலூருக்கு புகார் அளித்துள்ளனர்.
அதன்பின் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புகாரின்பேரில் அஜீத் குமாரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தகவல் தொழில்நுட்ப சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.