விவசாயி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கேர்மாளம் கிராமத்தில் விவசாயியான தனராஜ்(40)என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகள் துளசிமணி(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15-ஆம் தேதி துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொன்னுசாமி அங்கு சென்று பார்த்தபோது முகத்தில் காயங்களுடன் துளசிமணி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனராஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது துளசி மணியின் நடத்தை மீது சந்தேகப்பட்டால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தனராஜ் துளசிமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் தனராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.