மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் தீட்டுதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தங்களது படகுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், படகுகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வதோடு மீனவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு மத்திய மாநில அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடல் கொள்ளையர்களால் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல் மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.