ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி விரட்டியடித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
மேலும் ஒரு சில மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீனவர்கள் தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே மீன் பிடித்துள்ளனர். இதனால் மிகவும் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்ததால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.