மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 400 ஆண்டுகள் பழமைமிக்க கலைநயம் வாய்ந்த புது மண்டபத்தை இந்து சமய அறநிலைத்துறை பாதுகாக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை படிப்படியாக அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து குன்னத்தூர் சத்திரத்திற்கு புது மண்டபத்தில் இருந்து அகற்றப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள வியாபாரிகள் கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அங்குள்ள தூண்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சிறப்பாக உள்ளதால் அவற்றை காட்சிப்பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.