Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. தொடர் உண்ணாவிரத போராட்டம்…. சங்கத்தில் எடுத்த முடிவு….!!

மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வருகின்ற 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைபட்டு கிடக்கும் ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 56 பேரையும், 10 விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவரின் கோரிக்கை குறித்து முதலமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் வருகின்ற 21ஆம் தேதிக்குள் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் செசுராஜா தலைமை தாங்கிய நிலையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Categories

Tech |