Categories
மாநில செய்திகள்

“மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை”….  மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்….!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது 12 மீனவர்களையும் கைது செய்தனர் .அதேபோல் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த விசைப் படகுகளையும், ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |