தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.