Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த கொரோனா பலி… அச்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,91,303 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,27,949 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது வரை 3,32,454 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 52,128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 2 வாரங்களாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்திருந்த நிலையில் தற்போது 3 நாட்களாக 100க்கு கீழ் குறைந்திருந்ததால்  மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா உயிரிழப்பு இன்று மீண்டும் 100ஐ கடந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |