Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அபாயம் – தமிழக அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் இருந்தது. இதையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வரும் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3 ஆம் அலைக்கு வழி வகுக்காமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த தொற்றில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம், மனநிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |