Categories
உலக செய்திகள்

மீண்டும் மீண்டும் ஊரடங்கு…. சிக்கி தவிக்கும் மக்கள்…. முக்கிய முடிவெடுக்கும் ஸ்விஸ் கவுன்சில்…!!

 பொது முடக்கம் நீடிக்கப்படுவது மற்றும் தளர்த்துவது குறித்த முடிவுகளை ஸ்விஸ் பெடரல் கவுன்சில் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் இதுவரை குறையாத காரணத்தால் அங்கு கட்டுப்பாடுகள் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்  இந்த பொதுமுடக்கத்தை மீண்டும் நீடித்தால் நம் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும், வீடுகளிலே முடங்கி கிடக்கும் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள், இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் நிலையில் ஸ்விஸ் பெடரல் கவுன்சில் இந்த பொதுமுடக்கம் குறித்த முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |