Categories
உலகசெய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… வெளியான தகவல்…!!!!!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஓமைக்ரேன் எனும் புதிய வகை வேரியண்ட் பரவிக் கொண்டிருக்கிறது. இது பல நாடுகளில் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் கொரோனா  பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதன் பின் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1.42 கோடியை தாண்டியது. அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 42 லட்சத்து 67 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 662 ஆக அதிகரித்தது.

Categories

Tech |