Categories
மாநில செய்திகள்

மீண்டும் பறிக்கப்பட்ட சொத்துக்கள்… ஈபிஎஸ் அரசு அதிரடி…!!!

இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இன்று அரசுடைமை ஆக்கப்பட்டன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கி சென்னை மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கையை ஈபிஎஸ் அரசு மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன. அதன்படி காஞ்சிபுரம் ஊத்துக்காடு பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு நிலம் மற்றும் செங்கல்பட்டு செய்யூர் பகுதியில் உள்ள நிலமும் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

Categories

Tech |